Consumer Protection Day'16

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி வணிகவியல் துறை சார்பில் மார்ச் 15 நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னடிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவி அ. ஜன்னத்துல் பிர்தோஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர். T. ஜெயபிரகாசம் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் டீன். டாக்டர் பிரபாகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் நுகர்வோர் தினத்தை சிறப்பித்து மாணவர்களுக்கு " நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு " என்னும் தலைப்பில் மத்திய அரசு முதுநிலை வழக்கறிகர் A. கணேசன் அவர்கள் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களோடு தமது கருத்துக்களை பகிர்ந்து கொடுத்து சிறப்பு செய்தார். இத்தினத்தை முன்னிட்டு முதலாம் மற்றும் இரண்டாமண்டு மாணவ மாணவியர்களுக்கு திறனறிதல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.