அரசியலமைப்பு சட்ட தின கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இன்று 26.11.2015 இந்திய "அரசியலமைப்புச் சட்ட தினம்" கொண்டாடப்பட்டது. இந்த தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக வணிகவியல் துறையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் T.ஜெயப்பிரகாசம் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லுரிக்குழு தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமை உரையாற்றினார். இதனை தொடர்ந்து வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் I.சுமதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சுதர்சன் சுந்தரம் அவர்கள் உரையாற்றுகையில், அரசியல் அமைப்புச் சட்டம் பற்றியும் மாணவர்களுக்கு சட்டத்தின் அவசியத்தை பற்றியும் கூறினார். மேலும் நம் நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தையும், பிறநாடுகளின் சட்ட அமைப்பினையும் ஒப்பிட்டுக் கூறினார். இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். பேராசிரியர். அ.ஜனத்துல் பிரதோஷ் அவர்கள் நிகழ்ச்சியின் நிறைவில் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

-==============================Content=================================-->

Deprecated: Directive 'allow_url_include' is deprecated in Unknown on line 0